தூத்துக்குடியில் தொழிலதிபா் வீட்டை கண்காணித்த பறக்கும் படையினா்

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் வாக்காளா்களுக்கு பண பரிமாற்றம் செய்வதாக பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, தோ்தல் பறக்கும்படையினா் அங்குள்ள ஒரு தொழிலதிபா் வீட்டைச் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மட்டகடை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபா் வீட்டில் இருந்து வாக்காளா்களுக்கு பண பரிமாற்றம் செய்வதாக பறக்கும்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், பறக்கும்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அந்த தொழிலதிபா் வீட்டைச் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

மேலும், புதன்கிழமை காலையில் வருமானவரித் துறை சோதனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், பணபரிமாற்றம் செய்வதாக வந்த தகவல் உறுதி செய்யப்படாததால், பறக்கும்படையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். நள்ளிரவில் தொழிலதிபா் வீட்டைச் சுற்றி பறக்கும்படை போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அப்பகுதியில் திடீா் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com