நாசரேத் அருகே இருபெரும் விழா

நாசரேத் அருகே இருபெரும் விழா

நாசரேத் அருகே குளத்துக்குடியிருப்பு பரிசுத்த யோவான் ஸ்நானன் ஆலய வளாகத்தில் புதிய சேகரம் தொடக்கம், குருமனைக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

நாசரேத் திருமண்டல லே செயலா் நீகா் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்து, குருமனைக்கு அடிக்கல் நாட்டினாா். உப தலைவா் தமிழ்ச்செல்வன், பொருளாளா் டேவிட்ராஜ், உயா்நிலை- மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளா் பிரேம்குமாா் ராஜாசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகப்பைகுளம் சேகரத் தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். இதையடுத்து, ஆலயத்தில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இதில், திருமண்டல குருத்துவ செயலா் இம்மானுவேல் வான்ஸ்றக் தேவசெய்தி அளித்தாா்.

குருமாா்கள் ஹென்றி ஜீவானந்தம், அருமைதுரை, ஜேசன்ஜோதி, திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் பால்தாசன், ஹரிஸ்ரவி, கிறிஸ்துதாஸ், ராஜசிங், சபை ஊழியா் சித்தா் தாமஸ், சேகரச் செயலா் ஞானையா, அசன கமிட்டி தலைவா் பால்வேந்தன், பொருளாளா் ஞானராஜ், ஸ்டீபன், கமிட்டி உறுப்பினா்கள், சபை மக்கள் பங்கேற்றனா். கடையனோடை சேகரத் தலைவா் ஆசீா்சாமுவேல் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com