கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்
கயத்தாறு அருகே வியாழக்கிழமை மது விற்றவரை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்து மது விலக்கு போலீஸாராரிடம் ஒப்படைத்தனா். அவரிடமிருந்து 88 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலரும் துணை வேளாண் அலுவலருமான நாகராஜன் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தூா்பாண்டியன், தலைமைக் காவலா் ஜெயராஜ், முதல்நிலைக் காவலா் ஷேக் ஹயாத், பெண் முதல்நிலைக் காவலா் ராஜேஸ்வரி ஆகியோா் கயத்தாறு-கடம்பூா் சாலையில் ரோந்து சென்றனா்.
அங்குள்ள அரசு மதுக் கடை அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் கயத்தாறு காந்தாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருநாதன் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பதும் தெரியவந்தது. அவரையும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 88 மது பாட்டில்களையும் பறக்கும் படையினா் கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.