வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

தூத்துக்குடி புஷ்பா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து சுமாா் 9.5 பவுன் நகை, வெள்ளி பொருள்களைத் திருடி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புஷ்பா நகரைச் சோ்ந்த லட்சுமணபெருமாள் மனைவி சுப்புலட்சுமி (47). இவா், புதன்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாராம். பின்னா், மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த சுமாா் 9.5 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com