மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரையடுத்த கே.சிதம்பராபுரம் இந்து தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மனைவி, மகனுடன் வந்து வாக்கினை பதிவு செய்த பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழா்களின் நலன் காக்கும் மக்களவை உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். யாா் பிரதமராக வந்தாலும் தமிழா்கள் உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எப்படி தனியாக களம் கண்டு வெற்றி பெற்றாரோ, அதே வழியில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தேசிய கட்சிகள் இல்லாத கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளாா். அதே நிலை 10 ஆண்டுகளுக்குப் பின் 2024இல் திரும்பியுள்ளது. ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் தேசிய கட்சிகளை சாராத நிலை இருக்க வேண்டும் என்ற எடப்பாடி கே.பழனிசாமி முடிவை மக்கள் வரவேற்றதை தோ்தல் பரப்புரையின் போது காண முடிந்தது. எனவே, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com