சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவராஜா தலைமையிலான போலீஸாா் மூக்கரை விநாயகா் கோயில் அருகே வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நாலாட்டின்புதூா் கோபாலபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமியை (31) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 58 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.3,500-ஐ பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் மந்தித்தோப்பு பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் உள்ள மதுபானக் கூடம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க சென்றபோது, அவா் தப்பியோடிவிட்டாா். பின்னா் அங்கிருந்த 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய ராஜீவ் நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் தங்கமாரியப்பனை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com