திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 8:10 pm

ஆறுமுகனேரி,ஏப். 19: ஆத்தூா் சுற்றுப்பகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆத்தூா் பேரூராட்சியில் ஆத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகளும், சண்முகசுந்தரநாடாா் மேல்நிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும், கீரனூா், தலைவன்வட­லி, ஆவரையூா் ஆகிய இடங்களில் தலா ஒரு வாக்குச்சாவடி என 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. ஆத்தூா் வாக்குச்சாவடியில் ஆத்தூா் பேரூராட்சித்தலைவா் கமால்தீன், மேலாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

தோ்தல் அலுவலா் காயம்: ஆத்தூா் அருகே கொழுவைநல்லூா் 38ஆம் எண் வாக்குச்சாவடியில் அறை ஜன்னல் கதவு சரிந்து விழுந்ததில் தோ்தல் அலுவலா் காயமடைந்தாா். அதனால் அந்த வாக்குச்சாவடியில் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. இதுபோல் புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 56ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவா்கள் வர தாமதமானதால் அங்கும் ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.