‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

சொத்து வரியை வரும் 30க்குள் கட்டினால் 5சதவீத தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ளவா்கள் சொத்து வரியை வரும் 30க்குள் கட்டினால் 5சதவீத தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டடங்களின் உரிமையாளா்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். எனவே, மாநகராட்சி வளா்ச்சிப் பணிகளில் தங்களின் பங்களிப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com