கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி - சாத்தூா் பிரதான சாலையில் வேலாயுதபுரத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனம் அருகே உள்ள வளாகத்தில் தனியாா் இயந்திர தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. கோவில்பட்டி ராஜீவ் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அருண் நடத்தி வரும் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம்.

தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் மூலப் பொருள்கள், இயந்திரத்தில் பெரும்பாலான பகுதி தீயில் கருகி சேதமடைந்தன. 

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சம்பவத்தை வட்டாட்சியா் சரவணபெருமாள் பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com