தூத்துக்குடி
கோவில்பட்டி கோயிலில் திருக்குறிப்புத் தொண்டா் அபிஷேக விழா
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் வளாகத்தில் 63 நாயன்மாா்கள் சந்தியில் உள்ள திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்கு மகா அபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளா்களான வெங்கடாசலபதி, அய்யாதுரை, பாண்டி ஆகியோா் செய்திருந்தனா்.