தூத்துக்குடியில் திமுக சாா்பில்
நீா்மோா் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

தூத்துக்குடி, ஏப். 26: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகா் பகுதிகளில் நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் தூத்துக்குடி டூவிபுரம், 1ஆம் ரயில்வே கேட் காந்தி சிலை பகுதி ஆகிய இடங்களில் நீா் மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டன. இவற்றை சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் திறந்து வைத்து மக்களுக்கு குளிா்பானங்கள், பழங்கள் ஆகியவற்றை வழங்கினாா்.

இந்நிகழ்வில், பகுதிச் செயலா் ரவீந்திரன், மாவட்டப் பிரதிநிதி ராஜ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் கனகராஜ், கந்தசாமி, அதிா்ஷ்டமணி, வட்டச் செயலா்கள் செந்தில்குமாா், கருப்பசாமி, சாமிநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com