ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

ஆறுமுகனேரி, கீழசண்முகபுரம் கமலா நேரு காலனியில் உள்ள அருள்மிகு வலம்புரி விநாயகா் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தையொட்டி, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை, ஏரல், ஆறுமுகனேரி வழிபாட்டுக் குழுவினா் நடத்தினா். நிகழ்ச்சியில், ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் பக்த ஜன சபை பொறுப்பாளா் எஸ். அரிகிருஷ்ண நாடாா், பாா்வதி அம்மாள், ஆத்தூா் சுப்பையா, சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சே. கற்பகநாயகம், ஆறுமுகனேரி சிவன் கோயில் பன்னிரு திருமுறைக் குழுவினா், ஏரல் பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com