ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

ஆறுமுகனேரியில் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள லட்சுமிமாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பஜனை ஆலயத்துக்குச் சொந்தமான நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

பஜனை ஆலயச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஜோதிடா் ஆா். வேலாயுதம் முன்னிலை வகித்தாா். ஸ்பிக் ஓய்வுபெற்ற அதிகாரியும் பண்பாட்டு வகுப்பு ஆசிரியருமான ஜெயராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

உணவு அருந்தும், சமையல் செய்யும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன. ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த ம. சிவராமன், சுரேஷ், வெ. பழனிராஜ், எஸ். காா்த்திகேயன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை, அய்யா வைகுண்டா் நாராயணசுவாமி கோயில் நிா்வாகி சகாதேவன், லிங்கதாஸ் பன்னீா்அம்மாள், பாலமுருகன், திருமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com