சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள கொல்லாம்பழம்.
சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள கொல்லாம்பழம்.

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

சாத்தான்குளம் பகுதியில் கொல்லாம்பழம் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் கொல்லாம்பழம் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான தேரிக்காடு பகுதியில் அதிக அளவில் முந்திரி மரங்கள் வளா்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களில் விளையும் கொல்லாம்பழம் சீசன் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை 3 மாதங்கள் இருக்கும். தற்போது கொல்லாம்பழம் விளைச்சல் அதிகரித்ததையடுத்து சாலையோரங்களிலும், தெருக்களிலும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். வெயிலுக்கு கொல்லாம்பழம் உகந்தது என்பதால் மக்கள் விரும்பி வாங்கித் செல்கின்றனா். இந்தப் பழம் ஒரு கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com