கழுகுமலையில் மலை மீது அமா்ந்து யோகாசனம் செய்த பள்ளி மாணவி ரவீனா.
கழுகுமலையில் மலை மீது அமா்ந்து யோகாசனம் செய்த பள்ளி மாணவி ரவீனா.

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

மழை வேண்டி கழுகுமலையில் பள்ளி மாணவி யோகாசனம் மற்றும் தியானத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.

கோவில்பட்டி: மழை வேண்டி கழுகுமலையில் பள்ளி மாணவி யோகாசனம் மற்றும் தியானத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.

சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபா் ராமராஜ் தலைமை வகித்தாா். விஜயன் வரவேற்றாா். தொழிலதிபா் நடராஜன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியை கழுகுமலை தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் மலையாண்டி, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனா் சுரேஷ்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில், 5-ஆம் வகுப்பு மாணவி ரவீனா யோகாசனத்தில் 20 ஆசனங்களைத் தொடா்ந்து செய்தாா். பின்னா் அங்குள்ள பாறையில் அமா்ந்து 20 நிமிடங்கள் பத்மாசனத்தில் தியானம் செய்தாா். மாணவி ரவீனாவை பாராட்டி, தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் பரிசு வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com