தூத்துக்குடி
சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்
சாலையோர வியாபாரிகளுக்கு தொடா்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி: தமிழக அரசின் அடையாள அட்டையுடன் வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளுக்கு தொடா்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவாசன் தலைமையில் எட்டயபுரம் சாலை மங்களவிநாயகா் கோயில் அருகே இருந்து ஊா்வலமாக கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்தனா். பின்னா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் மனு அளித்தனா்.
இதேபோல, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் , அந்த அமைப்பினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.