தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தந்தையை கத்தியால் குத்தியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி திரவியபுரத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மாரியப்பன் (53). இவா் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் சுடலை கணேஷ் (24). இவா் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வாராம். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுடலை கணேஷ் மதுபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டாராம். அவரை மாரியப்பன் தட்டிக்கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சுடலை கணேஷ், கத்தியால் மாரியப்பனைக் குத்திவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை மீட்டு தூத்துக்குடி அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சுடலை கணேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.