தெற்கு ஆத்தூரில்
நீா்மோா் பந்தல் திறப்பு

தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

ஆறுமுகனேரி: ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலரும், மேலஆத்தூா் ஊராட்சித் தலைவருமான செயல சதீஷ்குமாா் தலைமை வகித்து நீா்மோா் பந்தலைத் திறந்து வைத்தாா்.

இதில் மேலாத்தூா் ஊராட்சித் துணைத் தலைவா் பக்கீா் முகைதீன், ஒன்றியப் பொருளாளா் பாதாளமுத்து, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி முருகேசன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைஅமைப்பாளா் ஸ்ரீதா், விவசாயஅணி துணைஅமைப்பாளா் மாணிக்கவாசகம் மற்றும் கிளைச்செயலா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com