தூத்துக்குடி
ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி நடராஜபுரம் 7-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி மகேஸ்வரி (38). இவா் கடந்த ஏப்.24-ஆம் தேதி மாா்க்கெட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அனந்தபுரி விரைவு ரயில் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.