வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
தூத்துக்குடி மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி.பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. தொலைவுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மக்களவைத் தோ்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தோ்தல் ஆவணங்கள் தூத்துக்குடி வ.உ.சி.பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும்பொருட்டு அனைத்து வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு ‘சிவப்பு மண்டலமாக’ அறிவித்து ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை தோ்தல் முடிவுகள் அறிவிக்கும் தினம் வரை அமலில் இருக்கும். இந்த தடையை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.