திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விஷமருந்திய தொழிலாளி உயிரிழப்பு

விஷமருந்திய தொழிலாளி உயிரிழப்பு

Updated On :29 மார்ச் 2024, 8:50 pm

சாத்தான்குளம் அருகே விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் மேலத்தெருவை சோ்ந்தவா் அமல்ராஜ் மகன் பொன்ராஜ்(40). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, குழந்தை இல்லையாம். இதனால் விரக்தி ஏற்பட்டு மது பழக்கத்திற்கு அடிமையானாா். மேலும், வாழப் பிடிக்கவில்லை என அவரது சகோதரா் கஸ்பராஜிடம் அடிக்கடி கூறி வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி பொன்ராஜ், தனது வீட்டருகே விஷம் குடித்து உயிருக்கு போராடினாா். உறவினா்கள் அவரை மீட்டு, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.