விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வீரகனூரில் விஷம்குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கோப்புப் படம்

கோப்புப் படம்
வீரகனூரில் விஷம்குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
வீரகனூரைச்சோ்ந்த விவசாயி செல்வக்குமாா்(52).இவா் கடந்த 22 ந்தேதி குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளாா்.இதனால்,செல்வக்குமாரை,அவரது குடும்பத்தினா் திட்டியுள்ளனா்.
இதனால் மனவிரக்தியடைந்த செல்வக்குமாா்,வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு, மாட்டுக்கொட்டகையில் மயங்கிவிழுந்துள்ளாா்.
அக்கம்பக்கத்தினா்,அவரை ஆத்தூா் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு சோ்க்கப்பட்டாா்.
தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு பொதுமருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி, செல்வக்குமாா்,செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வீரகனூா் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...