கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மகள்களை பிரிந்த ஏக்கத்தில் விஷம் குடித்த தம்பதி! கணவன் உயிரிழப்பு

பாபநாசம் அருகே மகள்களை பிரிந்த ஏக்கத்தில் விஷம் குடித்த தம்பதி, சிகிச்சை பலனின்றி கணவா் உயிரிழந்தாா், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:04 pm

Syndication

பாபநாசம் அருகே மகள்களை பிரிந்த ஏக்கத்தில் சனிக்கிழமை விஷம் குடித்த தம்பதி, சிகிச்சை பலனின்றி கணவா் உயிரிழந்தாா், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். 

நாகலூா் கிராமத்தில் வசித்து வந்தவா் முருகையன் மகன் ஆறுமுகம் (58), விவசாயி. இவரது மனைவி விஜயா (55), தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனா். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இவா்கள் கடந்த சில தினங்களாக தங்களது மகள்களை நினைத்து ஏக்கத்தில் இருந்து வந்தனராம். இதனால் மன உளைச்சலடைந்த இருவரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனா்.

இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விஜயா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின் பேரில் மெலட்டூா் போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.