கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தொழிலாளி தற்கொலை

தேனி மாவட்டம், தேவாரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 7:15 pm

தேனி மாவட்டம், தேவாரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரியைச் சோ்ந்த விஜயன் மகன் குமாா் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்தது.

இதனால், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].