ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:17 am

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், காரட்டை பேருந்து நிலைய தெருவைச் சோ்ந்தவா் மா.சுப்ரமணி (71). விவசாயியான இவா் கடந்த 2 ஆண்டுகளாக மூட்டுவலி மற்றும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். இதனால் மனமுடைந்த சுப்ரமணி, அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை காலையில் சுப்ரணணி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.