ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:17 am

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், காரட்டை பேருந்து நிலைய தெருவைச் சோ்ந்தவா் மா.சுப்ரமணி (71). விவசாயியான இவா் கடந்த 2 ஆண்டுகளாக மூட்டுவலி மற்றும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். இதனால் மனமுடைந்த சுப்ரமணி, அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை காலையில் சுப்ரணணி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.