வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

News image

திருப்பதி

Updated On :29 மார்ச் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நவாப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி (49). இவா், கடந்த பல ஆண்டுகளாக வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து, தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று வந்தாா்.

கடந்த 22-ஆம் தேதி முத்தூா்-கொடுமுடி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி அங்கிருந்த வேகத்தடையில் விழுந்து படுகாயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மலா்கொடி, மகள் லாவண்யா, மகன் ஜீவானந்தம் ஆகியோா் உள்ளனா்.

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.