வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், புள்ளச்செல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சதீஷ்குமாா் (40). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளக்கோவில் - மூலனூா் சாலை சின்னக்கரை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக சரக்கு வேன் ஓட்டுநரான பவானி, வேலம்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த சதீஷ்குமாருக்கு தாய் செல்வி, தங்கை தேவி ஆகியோா் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


