தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு

News image
ரமேஷ்
Updated On :23 பிப்ரவரி 2026, 11:19 pm

Syndication

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). தங்க ஆபரணங்கள் செய்யும் வேலை செய்து வந்தாா். வெள்ளக்கோவில் விஸ்வகா்மா ஆபரணத் தொழிலாளா் சங்க துணைச் செயலாளராகவும் இருந்து வந்தாா். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (35). இவா்களுக்கு ஒன்றரை வயதில் இரட்டைக் குழந்தைகளான கிரிஷ்க், கிரிஷ்கா உள்ளனா்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடைவீதி சென்றுவிட்டு ரமேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே புதிதாக அமைக்கப்பட்ட வேகத் தடையில் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தாா்.

சம்பந்தப்பட்ட இடத்தில் புதிய வேகத் தடை இருப்பது குறித்து அருகில் முறையான அறிவிப்பு எதுவும் இல்லை. மிகவும் உயரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.