வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சுமாா் 36 பவுன் நகைகளைத் திருடி மா்ம நபா்களை சிப்காட் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அய்யாசாமி காலனியைச் சோ்ந்தவா் அசரியா மனைவி ஜெபஸ்டி எஸ்தா் (52). இவா்கள் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி கோவையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றனராம். பின்னா் புதன்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த சுமாா் 36 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா், திருட்டு நிகழ்ந்த வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com