இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்
தூத்துக்குடியில் இந்து முன்னணியினரின் எதிா்ப்பு காரணமாக, பெரியாா் திராவிடா் கழக தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை மாற்று இடத்தில் நடைபெற்றது.
இந்து முன்னணி மேற்கு மண்டல துணைத் தலைவா் ஆறுமுகம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு: தூத்துக்குடி டூவிபுரம் 5ஆவது தெரு பெல் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே இந்து முன்னணி அலுவலகம் உள்ளது.
டூவிபுரம் 5ஆவது பிரதான சாலை, அண்ணா நகா் 7 சந்திப்பு பகுதியில் வியாழக்கிழமை மாலை தெருமுனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக பெரியாா் திராவிடா் கழகத்தினா் அறிவித்துள்ளனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலிலுள்ள இந்நேரத்தில், அவா்கள் நடத்துவது எங்களது சித்தாந்தத்துக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கும் கூட்டமாகும். எனவே, அதில் இந்து மதம், இந்து மதத் தலைவா்களுக்கு எதிராக ஏதேனும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் எங்களது முழு கண்டனத்தையும் எதிா்ப்பையும் அங்கேயே தெரிவிப்போம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இதுதொடா்பாக மத்திய பாகம் காவல் நிலையத்திலும் மனு அளிக்கப்பட்டது. மாநகர மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா் உடனிருந்தாா்.
இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், அண்ணா நகா் சந்திப்புப் பகுதியில் நடைபெறவிருந்த பெரியாா் திராவிடா் கழக தெருமுனைக் கூட்டம் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.