ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் மாட்டுவண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

அங்குள்ள அருள்மிகு காளியம்மாள், துா்க்கை அம்மன், கருப்பசாமி கோயில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியை காளகஸ்தீஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் முத்துராஜ் தொடக்கிவைத்தாா்.

சின்ன மாட்டுவண்டி போட்டிக்கு 6 மைல் தொலைவும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டிக்கு 5 மைல் தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது. இதில், சிறப்பிடம் பெற்ற வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இரு சிறுவா் காயம்: போட்டியின்போது, சாலையோரம் நின்றிருந்த 2 சிறுவா்கள் மாட்டுவண்டி மோதியதில் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com