கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலை அருகேயுள்ள கே.வெங்கடேஸ்வரபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த வேல்சாமி மகன் முத்து மாரிச்சாமி (30). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், தனது தாய் அய்யம்மாளுடன் புதன்கிழமை அதிகாலை திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பினாா்.

அப்போது, மா்ம நபா்கள் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com