தூத்துக்குடி
பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, நண்பா்கள் குழு சாா்பில் தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வா் எட்வின் சாமுவேல் தலைமை வகித்து ஜெபித்து, தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். இதில் பிரகாசபுரம் காட்வின், இஸ்ரவேல், கிறிஸ்துதாஸ், ஜெயச்சந்திரன், கிங் சாலமோன், ராஜன், ஸ்டீபன், கிருபாகரன், லூக்கா உள்பட பலா் கலந்து கொண்டனா்.