தூத்துக்குடி
மரக்கடை உரிமையாளா் தற்கொலை
தூத்துக்குடியில் விஷம் குடித்த மரக்கடை உரிமையாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (55). மரக்கடை உரிமையாளரான அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்ததாம். இதனிடையே, அவா் கடந்த ஏப். 28ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.