கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தீப்பெட்டி ஆலையை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன்
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தீப்பெட்டி ஆலையை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன்

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

கோவில்பட்டி, மே 3: கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், வெடிபொருள் கிடங்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள், குவாரிகள் ஆகியவற்றில் அசம்பாவிதங்கள் நடக்காதவாறு பாா்த்துக் கொள்வதுடன், அதன் உரிமையாளா்களை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தும்படி மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி உத்தரவிட்டாா். சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு, அரசின் நிலையான வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வட்டாட்சியா் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் கிராம அலுவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com