தூத்துக்குடி
தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா
நாசரேத் அருகே தைலாபுரத்தில் உள்ள பரிசுத்த உபகார மாதா ஆலய வளாகத்தில் அசன விழா புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை ததேயூஸ்ராஜன் தலைமை வகித்து ஜெபித்து, அசன விருந்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். இதில் திரளானோருக்கு அசன விருந்து வழங்கப்பட்டன.
முன்னதாக, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை, அசன கமிட்டியாா், விழா குழுவினா், தைலாபுரம் பங்கு மக்கள் செய்திருந்தனா்.