தூத்துக்குடி
ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்
ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலாண்மைக் குழுத் தலைவா் ரத்தினஷீலா தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் குழுத் தலைவா் ஞானதுரை முன்னிலை வகித்தாா்.
முன்னாள் மாணவா்கள் நாராயணன், நாராயணமூா்த்தி (நரசன்விளை), பள்ளி முதுகலை ஆசிரியா் பாக்கியம், குழு உறுப்பினா்கள், பெற்றோா் பங்கேற்று, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம், உயா் கல்வியின் அவசியம், மாணவா்கள் சோ்க்கை குறித்து தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.
தலைமையாசிரியை செ. அன்னலெட்சுமி நன்றி கூறினாா்.