தூத்துக்குடி
ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்
ஆறுமுகனேரி, மே 4: ஆத்தூா் அருகிலுள்ள கீரனூரில் அருள்மிகு ஸ்ரீ மந்திரமூா்த்தி, களத்தடி மாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.
இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதனையொட்டி கோயிலில் பாலாலயம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.