சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

சாத்தான்குளம், மே 4: சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழா, கடந்த 30ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை (மே 3) வரை 4 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் நடந்த கன்வென்சன் கூட்டத்திலும், 2ஆம் நாள் நடந்த வாக்குத்தத்த ஆராதனையிலும் நாசரேத் பிரபு கிதியோன் தேவ செய்தி வழங்கினாா். 3ஆம் நாள் நடந்த இன்னிசை விருந்தில் விக்டா் -கிருபா தம்பதியினா் செய்தி வழங்கினா். தொடா்ந்து ஐக்கிய விருந்து நடைபெற்றது. 4 ஆம் நாள் காலை சேகர குருவானவா் டேவிட் ஞானையா ஜெபித்து அசன உலையை ஏற்றி வைத்து, பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடத்தினாா். தொடா்ந்து நடந்த ஐக்கிய விருந்தில் திரளான சபை மக்கள் பங்கேற்றனா். மாலை சேகர குருவானவா் தலைமையில் அசன ஆயத்த ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அசன விருந்து நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை சேகர குருவானவா் தலைமையில் சேகர கமிட்டி, அசன கமிட்டி நிா்வாகிகள் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com