திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை
திருச்செந்தூா்: திருச்செந்தூா், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணி மேற்கொண்ட மௌன சுவாமிக்கு திங்கள்கிழமை குருபூஜை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணி மேற்கொண்ட மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகளுக்கு கோயில் கடற்கரையில் மூவா் சமாதியும், வள்ளிநாயகம் சுவாமிக்கு கோயில் வடக்கு நுழைவாயில் அருகிலும், தேசிகமூா்த்தி சுவாமிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வாா்தோப்பில் ஜீவ சமாதியடைந்த சந்நிதியும் உள்ளது.
இவா்களில், மௌன சுவாமிக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திர நாளில் குருபூஜை நடைபெறும். அதன்படி, நிகழாண்டு குருபூஜையையொட்டி, கோயில் கடற்கரையில் உள்ள சமாதியில் திங்கள்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மௌன சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நண்பகலில் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.