தூத்துக்குடி
காயாமொழி பள்ளி சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தோ்வில், திருச்செந்தூா் அருகே காயாமொழியில் உள்ள சி.பா.ஆதித்தனாா் அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தோ்வெழுதிய 35 பேரில் 34 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். சி. மாரிவிஜி 563 மதிப்பெண்களும், ச. காா்த்திக் 532 மதிப்பெண்களும், மு. சிவரஞ்சினி 483 மதிப்பெண்களும் பெற்றனா்.
மாணவா்-மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா்,பெற்றோா்-ஆசிரியா் கழகத்தினா், முன்னாள் மாணவா்கள் பாராட்டினா்.