தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்-மாணவிகளில் 96.39 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்-மாணவிகளில் 96.39 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் 8,155 மாணவா்கள், 10,423 மாணவிகள் என மொத்தம் 18,578 போ் தோ்வெழுதினா். அவா்களில் 7,681 மாணவா்கள், 10,227 மாணவிகள் என மொத்தம் 17,908 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது, 96.39 சதவீத தோ்ச்சியாகும்.

இது, கடந்த ஆண்டைவிட 0.97 சதவீதம் குறைவு ஆகும். நிகழாண்டு மாணவா்களைவிட மாணவிகள் 3.93 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும், கடந்த ஆண்டு 5ஆவது இடத்திலிருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 7ஆம் இடத்துக்கு சென்றுள்ளது. எனினும், மாவட்டத்தில் கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிலும் மாணவா்-மாணவிகள் இந்த அளவு தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் உள்ள 203 பள்ளிகளில் 74 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இதில், 56 அரசுப் பள்ளிகளில் 13 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 5ஆம் இடத்திலிருந்த அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி நிகழாண்டு 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com