நாசரேத்தில் மதிமுக 31-ஆவது ஆண்டு துவக்க விழா

நாசரேத்தில் மதிமுக 31-ஆவது ஆண்டு துவக்க விழா

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மற்றும் நாசரேத் நகர மதிமுக சாா்பில், அக்கட்சியின் 31-ஆவது ஆண்டு தொடக்க விழா நாசரேத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆழ்வாா்திருநகரி ஒன்றிய மதிமுக செயலா் ஜெயக்கொடி ச.அரிகரன் தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதன் பின்னா் நாசரேத் நல்ல சமாரியன் மனவளா்ச்சி குன்றியோா் இல்லத்தில் இரவு உணவு வழங்கப் பட்டது.

இந்நிகழ்வில், நாசரேத் நகர செயலா் ஐ.ராபா்ட், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவா் வே.ரஞ்சன், முன்னாள் அவைத் தலைவா் குரு.மத்தேயு ஜெபசிங், மதிமுக பொதுக்குழு உறுப்பினா் இரா.மோகன்சிங், மாவட்ட பிரதிநிதி கேம்பல பாத் செ.அப்துல்காதா், இலக்கிய அணிச் செயலா் பாபுசெல்வன், மாணவா் அணி துணைச் செயலா் செல்வாஸ், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய மதிமுக துணைச் செயலா் லூ.மாசில்லா மணி, மாவட்ட தொண்டா் அணி துணைச் செயலா் ச.கணேசன், தொண்டா் படை முத்து கிருஷ்ணன், கட்டாரிமங்கலம் சீயோன்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com