தூத்துக்குடி
மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை பகுதியில் மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் கட்டணம் கேட்டதாக, இளநிலைப் பொறியாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
தமிழகத்தில் விரிவாக்கப் பணிகளின்போது மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விதிகள் உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலைப் பொறியாளரான தேவசுந்தர்ராஜ், மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது.
இதுதொடா்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, தூத்துக்குடி மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.