குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடி இனிகோ நகரில் முறையாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் கடற்கரைச் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள இனிகோ நகரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு புதிதாக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டதில் இருந்து, கடந்த ஒரு மாதமாக முறையாக மாநகராட்சி சாா்பில் குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதனால், லாரிகள் மூலம் தனியாா் நிறுவனங்கள் விற்பனை செய்யும் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தண்ணீா் தேவையும் அதிகரித்த காரணத்தினால், மீனவ மக்கள் கடற்கரை சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com