கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை
கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாநகா், பெத்தேல் பின்புறமுள்ள பகுதியில் அரசு மதுக் கடையும், அருகே மதுக் கூடமும் உள்ளன.
கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த முருகன் நடத்திவரும் அந்த மதுக் கூடத்தில், இந்திரா நகரைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் குருசாமி (62) வேலை பாா்த்து வந்தாா்.
கயத்தாறு அருகே சிதம்பரம்பட்டியைச் சோ்ந்த சண்முகையா மகன் சங்கரபாண்டியன் என்ற மூக்கையா, புதன்கிழமை மதுக் கூடத்துக்கு வந்து மது பாட்டில்கள் வாங்குவதற்காக குருசாமியிடம் பணம் கேட்டாராம். தர மறுத்த அவருடன் சங்கரபாண்டியன் தகராறு செய்து, அருகே கிடந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினாராம். இதில், குருசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, சங்கரபாண்டியனைத் தேடி வருகின்றனா்.