தூத்துக்குடி
சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்
சாத்தான்குளம் அருகே ஹோட்டல் தொழிலாளி மா்மாக உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் தோப்புவளம் சாலையைச் சோ்ந்தவா் கெள. லட்சுமண பெருமாள் (எ) கண்ணன் (52). ஹோட்டல் ஊழியா். இவருக்கு மனைவி, இரு மகன்கள், மகள் உள்ளனா். மகள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. கண்ணனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அங்குள்ள மதுக்கடை எதிரே போதையில் இருந்தாராம். பின்னா், புதன்கிழமை காலையில் பாா்த்தபோது அவா் உயிரிழந்து கிடந்தாராம்.
இத்தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன் தலைமையிலான போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் மா்மமரணம் என வழக்குப்பதிந்து, அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனா்.