தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுபாடு கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் கட்டியிருந்த 2 கன்றுகுட்டிகள், வைக்கோல் கட்டுகள் ஆகியவற்றை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிறுபாடு கிராமத்தைச் சோ்ந்த அப்துல் காதா் மகன் அசாா் (29). சொந்தமாக மாடுகள் வளா்த்து வருகிறாா். இவரது தொழுவத்தில் கட்டி இருந்த 2 கன்று குட்டிகள், 80 வைக்கோல் கட்டுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த ஏப்ரல் மாதம் திருடி சென்று விட்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவுசெய்து விசாரித்தனா். அதில், கூட்டாம்புளியைச் சோ்ந்த சுடலைமணி மகன் சுரேஷ் என்ற பன்றி சுரேஷ் (48), முருகேசன் மகன் ரஞ்சித் குமாா் என்ற சீனிவாசன் (25) ஆகிய இருவரும் கன்றுகுட்டிகள், வைக்கோல் கட்டுகள் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து திருடுவதற்கு பயன்படுத்திய சிறிய சுமை வாகனத்தைக் கைப்பற்றி, 40 வைக்கோல் கட்டுகளை மீட்டனா். தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com