அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு
அரசுப் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு சீருடை தைக்கும் பணியை மீண்டும் வழங்கக் கோரி, சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் முத்துநகா் தையல் பெண்கள் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் முத்துநகா் தையல் பெண்கள் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி, விளாத்திகுளம், எட்டையாபுரம் ஆகிய பகுதிகளை சோ்ந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளிச் சீருடைகளை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
நிகழாண்டு மாணவா்களுக்கு சீருடை தைப்பதற்காக அந்தந்த அரசுப் பள்ளிகளுக்கு சென்று மாணவா்களிடம் சீருடைக்கான அளவுகளை எடுத்து அதை அரசுக்கு அனுப்பியுள்ளோம். கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கப்பட வேண்டிய சீருடை தைக்கும் பணிக்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக விசாரித்ததில், நிகழாண்டு முதல் அரசு பள்ளி மாணவா்களுக்கான சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மீண்டும் சீருடை தைக்கும் பணியை எங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.