

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா ஐந்து தினங்கள் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு முதலாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அன்றைய தினம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரண்டாவது நாளான திங்கள்கிழமை அம்மன் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொடை விழா நாளான செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் எடுத்து பவனி வருதல், மதிய கொடை விழா, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தாமிரவருணி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து, நேமிசம் எடுத்து வந்து இரவு சாமக்கொடை, மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை மஞ்சள் நீராடி வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிறைவு நாளான வியாழக்கிழமை படைப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டி நடைபெற்றது. நான்கு தினங்கள் காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை தலைவா் சுகுமாா், செயலாளா் மோகனலிங்கம், பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் கணேசன், துணைச் செயலாளா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

சாத்தான்குளம் இசக்கியம்மன் கோயிலில் கொடை விழா

கடையம் அம்மன் கோயில்களில் கொடை விழா
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

